தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள் பகுதி 2: நோர்வேயிலிருந்து வெளியான இரண்டு தமிழ் சஞ்சிகைகள்

சுதந்திரதாகம் (1989)
சுவடுகள் (1988)

தமிழ். English.

«கடந்த காலத்தை சரிபார்ப்பவர் (control) எதிர்காலத்தை நிர்வகிக்கின்றார். நிகழ்காலத்தை நிர்வகிப்பவர் கடந்த காலத்தை சரிபார்க்கின்றார் (control).» (ஜோர்ஜ்ஓர்வெல் (George Orwell)2 ஒரு ஆவணக் களஞ்சியக் கண்ணோட்டத்தில், ஒரு தேசியம் தனது சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் பக்கங்களையும் பிரதிபலிக்கும் ஆவணங்களைப் பேணிப் பாதுகாத்து அணுக்கத்திற்குக் கிடைக்கச் செய்யும் பொழுது மட்டுமே பலமடைகின்றது. ஒரு சமூகம் தனது கடந்த காலத்தை ஆராய்வதன் மூலம் எதிர்காலத்தைத் திட்டமிடும் நுண்ணறிவைப் பெறுகின்றது. தனது நிகழ்காலத்தை ஆராய்வதன் மூலம் கடந்த காலத்தைப் பேணிப் பாதுகாக்கும் அடிப்படையைப் பெறுகின்றது.

dspora.no, 16.11.2020

«இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.»

மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன்4

சுதந்திரதாகம் (1989)│சுவடுகள் (1988)

உள்ளடக்கம்:

  • நோர்வேயில் தமிழர் புலம்பெயர்வு
  • நோர்வேயில் தமிழர் அமைப்புகள்
  • சுதந்திரதாகம்: தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
  • சுதந்திரதாகம்: செய்திமடல்
  • சுதந்திரதாகம்: சிறப்பு மலர்
  • சுதந்திரதாகம்: சஞ்சிகை
  • சுவடுகள்: தமிழ்-நோர்வே மக்கள் இணைவுகூடம்
  • சுவடுகள்: சஞ்சிகை
  • சமூக-அரசியல் மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள்

நோர்வேயில் தமிழர் புலம்பெயர்வு

1956 ஆம் ஆண்டு நோர்வேக்கு புலம்பெயர்ந்த முதல் ஈழத் தமிழர் அன்ரெனி இராஜேந்திரம் ஆவார். அவரைத் தொடர்ந்து, 1960 களில் இருந்து ஈழத் தமிழரின் நோர்வே புலம்பெயர்வை மூன்று முக்கிய கட்டங்களாகப் பிரிக்கலாம்:
1) ஒருங்கிணைத்த தொழிற்பயிற்சி கூடிய வேலை வாய்ப்பு அடிப்படையிலான புலம்பெயர்வு
2) நாட்டுப்புற உயர்நிலைப் பள்ளிகள் (Folkehøgskole) அல்லது பல்கலைக்கழகங்களுக்கு மாணவராகப் புலம்பெயர்வு
3) ஏதிலிகளாகப் புலம்பெயர்வு

குடும்ப மீள் ஒருங்கிணைவு அடிப்படையிலான புலம்பெயர்வு மேற்குறிப்பிட்டுள்ள மூன்று கட்டங்களிலும் இணையாக நடைபெற்று வந்துள்ளது.

நோர்வேயில் தமிழர் அமைப்புகள்

சுதந்திரதாகம்: தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

சுதந்திர தாகம்: செய்திமடல்

Tamil Coordinating Committee. (1989?). சுதந்திர தாகம். Oslo: Tamil Coordinating Committee

சுதந்திரதாகம்: சிறப்பு மலர்

Tamilar Nalanpuri Mantram. (1988). சுதந்திர தாகம். Oslo: Tamilar Nalanpuri Mantram

சுதந்திரதாகம்: சஞ்சிகை

சுவடுகள்: தமிழ்-நோர்வே மக்கள் இணைவுகூடம்

சுவடுகள்: சஞ்சிகை

சமூக-அரசியல் மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள்

வரலாறு எப்போதும் நமக்கு வழிகாட்டும்! ஆனால் அந்த வரலாறு நமக்கு வழிகாட்ட, அது முழுமையானதாக இருக்க வேண்டும்! அதனால்தான் தமிழ் சமூகத்தில் உள்ள அனைத்துக் கோணங்களையும் பார்வைகளையும் ஆவணப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். தனிநபர்களையும் தமிழ் அமைப்புகளையும் தமது வரலாற்றுப் பண்பாட்டு ஆவணங்களைப் பேணிப் பாதுகாக்கவும், பொது அணுக்கத்திற்கு விடுவதற்குமான திட்டத்தை உருவாக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
எவ்வாறு தமிழர் ஆவணங்களை புலத்தில் பாதுகாப்பாகப் பேணிப் பாதுகாக்கலாம் என்ற உங்கள் கருத்துகளை, சிந்தனைகளை, ஆலோசனைகளை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


பொறுப்புத் துறப்பு:
தமிழ்ச் சமூகத்தில் ஆவணங்களின் பற்றாக்குறை, சிதறடிக்கப்பட்ட ஆவணங்கள் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத்தைக் கொண்ட ஆவணங்கள் உள்ளன. இதனால் வாய்மொழி வரலாற்று நேர்காணல்களில் வெளிவரும் வரலாற்றுத் தகவல்களை சரிபார்க்கக்கூடிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் சவால் உள்ளது.
இச்சூழ்நிலையில், புலம்பெயர் தமிழரின் வரலாற்றை எழுதுவது ஒரு மாற்றம் பெறும் செயல்முறையாக (dynamic process) இருக்கலாம். இச்செயல்முறை காலப்போக்கில் ஒரு வரலாற்று எழுத்து வடிவத்தைப் புதுப்பித்து வளர்த்தெடுக்க உந்துகோலாக அமையும். எனவே, இவ்விணையத் தளத்தில் உள்ள தகவல்களில் திருத்தம் தேவைப்பட்டால், சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன் கருத்துக்களை வழங்குமாறு பொதுமக்களை வரவேற்கின்றோம்.


வாய்மொழி வரலாறு நேர்காணல் மற்றும் ஏனைய தொடர்பாடல்கள்

முன்நாள் சுதந்திரதாகம் சஞ்சிகைக் குழுச் செயற்பாட்டாளர்கள்.
முன்நாள் சுவடுகள் சஞ்சிகைக் குழுச் செயற்பாட்டாளர்கள்.
மதக்குரு ஸ்டிக் உட்னெம் (Priest Stig Utnem).
முன்நாள் உதயம் செயற்பாட்டாளர்கள்.
முன்நாள் தமிழர் நலன்புரி மன்றம் செயற்பாட்டாளர்கள்.
முன்நாள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள்.
முன்நாள் தமிழ்-நோர்வே மக்கள் இணைவுகூடம் செயற்பாட்டாளர்கள்.
ஏனைய தமிழ் சமூகச் செயற்பாட்டாளர்கள்.


அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்


புதுப்பிப்பு│Update: 25.12.2024

Leave a comment