சஞ்சயன் செல்வமாணிக்கம் வாய்மொழி வரலாற்று நேர்காணல்களை மேற்கொள்வதற்கான நேர்காணல் வழிகாட்டி ஒன்றை உருவாக்குவதற்கான உதவியை DsporA Tamil Archiveவிடம் 08. யூலை 2020 கோரினார். அவர் நோர்வே நாட்டில் நூலக நிறுவனத்திற்காக செயற்படும் ஒரு தன்னார்வலர். அவர் “நோர்வேயில் குடியேறிய தமிழர்களின் வாழ்க்கை” எனும் கருப்பொருளில் நோர்வே-தமிழர்களின் வாய்மொழி வரலாற்றை ஒலி/ ஒளி வடிவில் பதிவு செய்ய விரும்புகின்றான். அப்பதிவுகளை aavanaham.org இல் பேணிப் பாதுகாத்து ஆவணப்படுத்தும் சிந்தனையைப் பகிர்ந்து கொண்டார்.
உள்ளூர் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாக DsporA Tamil Archive இன் ஆரம்பகர்த்தா நோர்வேயில் தமிழ் கல்வியின் வளர்ச்சி தொடர்பாக வாய்மொழி வரலாற்று நேர்காணல் பதிவுகள் செய்து வருகின்றார். இத்திட்டம் DsporA Tamil Archive இன் திட்டமாக ஆரம்பிக்கப்படவில்லை. எனினும் DsporA Tamil Archive பெற்றுக்கொண்ட கோரிக்கையின் கருப்பொருளான, “நோர்வே வாழ் தமிழர்களின் புலப்பெயர் வாழ்க்கை”, அடிப்படையில் அந்த உள்ளூர் வரலாற்று நூல் திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட நேர்காணல் வழிகாட்டி மாற்றியமைக்கப்பட்டு இங்கு வழங்கப்படுகின்றது. இந்த வழிகாட்டி நோர்வே-தமிழரின் சூழலுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது. இருப்பினும், இந்த வழிகாட்டியில் உள்ள கேள்விகள் பிற புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு பொருத்தமாக இருக்கலாம். ஆனால் அந்தந்தப் புலம்பெயர் நாடுகளின் சூழலுக்கு ஏற்றவாறு கேள்விகளை மாற்றியமைக்க வேண்டிய தேவை இருக்கும்.
PDF │ Word
வாய்மொழி வரலாறு மற்றும் அதன் செயல்முறை பற்றிய மேலதிக தகவல்.
புதுப்பிப்பு│Update: